Showing posts with label Ratna cafe. Show all posts
Showing posts with label Ratna cafe. Show all posts

Thursday, October 13, 2011

Ratna cafe, velachery. My experience

சாப்பிட போற நமக்கு என்ன வேணும். தரம், சுவை, சரியான அளவு, சுத்தம், சேவை.

இதுல சுவை மத்த சுமாரான உணவகங்கள்ல இருக்கிற மாதிரி தான் இருக்கும். மத்த எதாச்சும் அந்த ரத்னா கபே'ல இருக்கானு போய் பாருங்க.

தரம் பத்தி தெரிஞ்சுக்க ஆசை பட்டீங்கனா அங்க சாம்பார் இட்லினு ஒன்னு இருக்கும். அதை சாப்பிட்டு பாருங்க. எங்க இருந்து பருப்பு வாங்கிட்டு வந்து போடுறாங்கனு தெரியல. அவ்ளோ குப்பை (பருப்பு தோல்) இருக்கும் அதுல.

சரியான அளவு இருக்குமா.?? கிடையாது.

ரத்னா கபே'ல ஒரு ப்ளேட் இட்லி சாப்பிடறதுக்கு ஒரு டம்பளர் தண்ணி குடிச்சிட்டு சும்மா இருக்கலாம்.
ஒரு ப்ளேட் இட்லி ருபாய் 22.50 

அந்த கேடு கெட்ட இட்லி புகைப்படம் கீழே பார்க்க

.


இவ்ளோ மெல்லிசா இட்லி போடா எங்க கத்துகிட்டாங்கனு  தெரில. இதுக்கு விலை 22.50 .  அங்க புகார் செஞ்சா, இவ்ளோ தாங்க அளவுனு பதில். நம்ம ஆளுங்க என்னைக்கு மதிச்சு பதில் பேசி இருக்காங்க. இது நமக்கு தேவை தானா.

சுத்தம், சேவை. இரண்டுமே அங்க கிடையாது. கரப்பான் பூச்சி, கொசு, இ, இதெல்லாம் சகஜம். 

எந்த உணவகங்கள்ல இதெல்லாம் இல்லாம இருக்குனு யோசிக்கிறீங்களா.

அஞ்சு ரூபாய்க்கு 2 இட்லி தர ரோட்டோர கடைல சுத்தம் எதிர் பாக்குறது நியாயம் இல்ல. இட்லி ருபாய் 22.50 கொடுத்து சாப்பிடும் போது இதெல்லாம் கண்டிப்பா பாக்கணும்.

வேலைக்கு வட மாநிலங்கள்ல இருந்து ஆளுங்கள கூட்டிட்டு வந்து வச்சி இருக்காங்க. வெறும் கை வச்சி தான் எல்லா பொருளையும் தட்டுல எடுத்து வச்சி கொண்டு வராங்க. கொஞ்சமாச்சும் யோசிங்க. நீங்க சாப்பிடற பொருளை ஒரு மூன்றாம் மனிதர் கை வைத்து கொடுக்கிறது எவ்வளவு அருவருப்பான விஷயம்.

---end--